எப்.முபாரக்-
திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் சாரயம் குடித்து விட்டு வீதியில் நின்று ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நபர் ஒருவரை இம்மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி பதில் நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே வெள்ளிக்கிழமை (5)உத்தரவிட்டார்.
செந்தூர், மதுரங்குடா பகுதியைச் சேர்ந்த பழணியாண்டி செல்வராசா வயது(49)என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கடற்றொழில் மேற்கொள்வதற்காக வேண்டி திருகோணமலை குச்சவெளி பகுதியில் சென்ற இவ்வாறு சாராயம் குடித்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை வியாழக்கிழமை (4)மாலையில் கைது செய்து பொலிஸார் குச்சவெளி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.