குடித்து விட்டு வீதியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவர் விளக்கமறியலில்..!

எப்.முபாரக்-
திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் சாரயம் குடித்து விட்டு வீதியில் நின்று ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நபர் ஒருவரை இம்மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி பதில் நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே வெள்ளிக்கிழமை (5)உத்தரவிட்டார். 

செந்தூர், மதுரங்குடா பகுதியைச் சேர்ந்த பழணியாண்டி செல்வராசா வயது(49)என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கடற்றொழில் மேற்கொள்வதற்காக வேண்டி திருகோணமலை குச்சவெளி பகுதியில் சென்ற இவ்வாறு சாராயம் குடித்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை வியாழக்கிழமை (4)மாலையில் கைது செய்து பொலிஸார் குச்சவெளி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -