அக்கரைப்பற்று வடிகானுக்குள்ளிருந்து ஆண் சிசு மீட்பு!

கே.எல்.முஹம்மத் நஜாத்-
பிறந்த உடனேயே கைவிடப்பட்ட ஆண் சிசுவொன்று அக்கரைப்பற்று சாகாமம் வடிகானுக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தொப்புள் கொடியுடன் இந்த ஆண் சிசு வடிகானுக்குள் இருந்ததை பெண்ணொருவர் கண்டெடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.

நேற்று (22) நண்பகல் 12.31 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகாம பிரதான வீதியின் அருகில் கோளாவில் பிரதேசத்தில் உள்ள வடிகானுக்குள் இருந்தே இச்சிசு மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் அக்கரைப்பற்று பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.(ந)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -