தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணான கெஹிண்டே அடெகோக் என்பவர் 4 ஆண்டுகளாக கனவில் பாம்புகளுடன் உடலுறவு வைத்து கொண்டதன் மூலம் கர்ப்பிணியாகி, குழந்தை பெற்றதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
நான்காண்டுகளாக கெஹிண்டே அடெகோக் இரவு வேளைகளில் உறங்கும்போது, தொடர்ந்து தினந்தோறும் அவரது கனவில் தோன்றும் ஒரு பாம்பு, மனிதனாக மாறி அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டு, பின்னர், பாம்பு ரூபமெடுத்து மறைந்து விடுவதாகவும், இந்த தாம்பத்யத்தின் பலனாகவே தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் கூறும் இவர், இதுவரை நான் வேறெந்த ஆடவருடனும் படுக்கையை பகிர்ந்து கொண்டதேயில்லை என சத்தியம் செய்து சொல்கிறார்.
அதற்கேற்ப, கடந்த மார்ச் மாதம் 28-ஆம் திகதி இவர் பெற்றெடுத்த ஆண் குழந்தைக்கு அதிசயமாக கீழ்தாடை பகுதியில் பாம்புகளுக்கு இருப்பதைப்போல் கூர்மையான இரு பற்களும் இருந்தன. ஒருநாளே உயிர் வாழ்ந்த அந்த குழந்தை 29-ஆம் திகதி இறந்துப் போனது.
பேய், பிசாசு புனைக்கதைகள் மற்றும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்தரீகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட நைஜீரிய மக்கள் கெஹிண்டே அடெகோக்-கின் பாம்புக் கதையை மையமாக வைத்து தற்போது பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.(ந-த்)