அருணின் பட வௌியீட்டை தள்ளி வைக்கச் சொன்ன அஜீத் – ஏன் தெரியுமா!?

ஹீரோவாக நடித்து வந்த அருண் விஜய், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடித்தார். இந்த வாய்ப்புக்காக தான் ஹீரோவாக நடித்த ‘வா’ பட வௌியீட்டை தள்ளி வைத்தது பற்றி கூறினார்.

அவர் கூறியது: 

சவால் என்று வந்தால் அதை வா வா என்று எதிர்கொள்ளும் கதாபாத்திரம். இப்படத்தை முடித்து வௌியிட தயாராக இருந்தபோது என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துடன் நடிக்க வாய்ப்பு வந்தது. கவுதம்மேனன் கதை சொன்னபோது எனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் புரிந்தது.

அஜீத்திடம் ‘வா’ படத்தை வௌியிட்டு விட்டு நடிப்பதாக கூறினேன். படத்தை பார்த்த அவர், என்னை அறிந்தால் படத்துக்கு பிறகு வௌியிடும்படி கூறினார். அவர் சொன்னது ஏன் என்பது இப்போதுதான் புரிந்தது. அவருடன் நடித்தபிறகு எனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு இத்தனை வருடம் எனக்கு கிடைக்காமல் இருந்தது.

இப்போது அவரது இரசிகர்களும் என்னை விரும்புகின்றனர். ‘வா’ படத்தில் கார்த்திகா ஹீரோயின். எஸ்.எஸ்.தமன் இசை. ஃபெதர் டச் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு. கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு, ஆர். ரத்தின சிவா இயக்கம். இவ்வாறு அருண் விஜய் கூறினார்.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -