ஊழல், மோசடிகள் குறித்து கடந்த காலத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கு எதிராகவும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணைகளின் ஆரம்பகட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கமைய பாரியளவிலான லஞ்ச, ஊழல் குறித்த ஐந்து குற்றச்சாட்டுக்களுக்காக ராஜபக்ச அரசாங்கத்தின் உயர் பதவியில் இருந்த மூன்று அரசியல்வாதிகளும், மூன்று அரச அதிகாரிகளும் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இந்த கைதுகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.