அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார் லலீத் கொத்தலாவ!

நிஷ்மி-
க்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டு நீண்ட காலமாக நீதிமன்றிற்கு சமூகமளிக்காமல் தவிர்த்துவந்த சிலிங்கோ பிரபீட் செயாரிங் தனியார் முதலீட்டு வங்கியின் தவிசாளர் ஜீவக லலீத் கொத்தலாவ நேற்று(25) அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதவான் கௌரவ மொஹமட் பஸில் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வாடிக்கையாளர்கள் குறித்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட வைப்புக்கள் மீள அளிக்கப்படாமையினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் நிமிர்த்தமே லலீத் கொத்தலாவ நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

லலீத் கொத்தலாவ தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அவரது உடல் நிலையையும், முதுமையையும் கருத்திற் கொண்டு பிணை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட நீதவான் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் வழங்கியதுடன் எதிர்வரும் ஜீன் மாதம் 05ம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். 

நடக்க முடியாததனால் சக்கர நாற்காலியிலேயே அவர் நீதிமன்றுக்கு வந்திருந்தார். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -