நிஷ்மி-
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டு நீண்ட காலமாக நீதிமன்றிற்கு சமூகமளிக்காமல் தவிர்த்துவந்த சிலிங்கோ பிரபீட் செயாரிங் தனியார் முதலீட்டு வங்கியின் தவிசாளர் ஜீவக லலீத் கொத்தலாவ நேற்று(25) அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதவான் கௌரவ மொஹமட் பஸில் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வாடிக்கையாளர்கள் குறித்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட வைப்புக்கள் மீள அளிக்கப்படாமையினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் நிமிர்த்தமே லலீத் கொத்தலாவ நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.
லலீத் கொத்தலாவ தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அவரது உடல் நிலையையும், முதுமையையும் கருத்திற் கொண்டு பிணை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட நீதவான் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் வழங்கியதுடன் எதிர்வரும் ஜீன் மாதம் 05ம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
நடக்க முடியாததனால் சக்கர நாற்காலியிலேயே அவர் நீதிமன்றுக்கு வந்திருந்தார்.