பரிதாபகரமான நிலையில் பெண் ஒருவர்- இறக்காமத்தில் சம்பவம்


 மட்டக்களப்பைச் சேர்ந்த அன்னம்மா (50) என்றழைக்கப்படும் தாய் ஒருவர் அக்கரைப்பற்று பிரதான வீதி , இறக்காமம் குளத்தா வளிச்சந்தியில் வைத்து நேற்றிரவு (26.07.2014) 08.00 மணியளவில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் முகத்தில் இரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டார். 

இதனைக்கண்ட அப்பிரதேச சிங்கள சகோதரர் ஒருவர் உடனே பொலிஸ் அவசரப் பிரிவு இலக்கம் 119ற்கு அழைப்பை மேற்கொண்டு இது பற்றி தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த இறக்காமம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது பஸ்ஸில் வந்த இனந்தெரியாத 03 நபர்கள் அப்பெண்மணியை பஸ்ஸிலிருந்து இறக்கி பலமாக தாக்கி அவரிடமிருந்து ஒரு தொகைப்பணம் மற்றும் தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் காயமடைந்த இவரை பொலிசார் சிகிச்சைக்காக இறக்காமம் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சுய நினைவு குன்றிய நிலையில் இவர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :