சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் அன்பு தாயார் உம்மு லத்தீபா ஸக்காப் மௌலானா காலமானார்

எம்.எஸ்.எம்.ஸாகிர்-

ல்முனை மாநகர சபையில் கடமைபுரிபவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அஸ்லம் மௌலானாவின் அன்புத் தாயார் உம்மு லத்தீபா ஸக்காப் மௌலானா காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் வானொலிக் கலைஞருமான மர்ஹூம் ஸக்காப் இஸட் மௌலானாவின் அன்பு மனைவியாவார்.

சித்தி மும்தாஜ், இனாம் மௌலானா, றிஸ்வான் மௌலானா, அஸ்வான் மௌலானா, ஜஹாங்கீர் (சௌபான்) மௌலானா, அஸ்லம் மௌலானா, முஹாஜிர் மௌலானா, றமீஸ் மௌலானா ஆகிய பிள்ளைகளின் அன்புத் தாயாரான இவரது ஜனாஸா, சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதி ஜின்னா லேனில் அமைந்துள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானா அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது ஜனாஸா இன்று (27) திங்கட்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது தக்வா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :