முன்னதாக, எரிபொருள் நிலையங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட வாகன வரிசைகள் காரணமாக ஏற்பட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில், 18.03.2026 முதல் வாகன நிறுத்துமிடக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இது எரிபொருள் நிரப்ப வருவோருக்கு சலுகையாகவும் அமுல்படுத்தப்பட்டது.
ஆனால், அரசாங்கம் அறிமுகப்படுத்திய QR குறியீட்டு முறை மற்றும் வாகன இலக்கத்தின் ஒற்றை/இரட்டை அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையால், தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு அருகிலான வாகன நெரிசல் குறைந்துள்ளது.
இதனையடுத்து, கொழும்பு மாநகர சபையின் நிதி நிலைக்குழு தீர்மானத்தின் பேரில், வாகன நிறுத்துமிடக் கட்டண வசூல் 23.03.2026 அன்று காலை 6.00 மணி முதல் வழக்கம்போல் மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment