“கல்விக்கு கை கொடுப்போம்” – ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் கல்வி உதவி திட்டம்



“கல்விக்கு கை கொடுப்போம்” எனும் தொணிப்பொருளின் கீழ், ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் முன்னெடுத்துள்ள கல்விக்கான உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தேவையுடைய மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைக்குத் தேவையான பள்ளிப் பைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கட்சியின் கொழும்பு மாவட்ட கிளை காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.

கல்வி என்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கும் அடித்தளம் என்பதையும், பொருளாதார சவால்கள் காரணமாக எந்த மாணவரின் கல்வியும் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு, இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்வதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் மகளிர் விவகார இணைப்பாளர்களான ஹனான் மற்றும் சிஹாமா ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பள்ளிப் பைகள் மற்றும் அவசியமான கல்வி உபகரணங்களை நேரடியாக வழங்கி வைத்தனர். மாணவர்களுடன் உரையாடிய அவர்கள், கல்வி மூலம் உயர்ந்த இலக்குகளை அடைய வேண்டும் என்றும், தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் ஊக்கமளித்தனர்.

இந்த உதவி திட்டம் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சமூகத்தில் கல்வி சார்ந்த பொறுப்புணர்வையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக அமைந்தது. எதிர்வரும் காலங்களிலும் நாட்டின் பல பகுதிகளில் இதுபோன்ற கல்வி உதவி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :