பஸ் மோதி விபத்து; மாநகர சபை ஊழியர் பலி!



அஸ்லம் எஸ். மெளலானா-
ல்முனை மாநகர சபையில் காவலாளியாக கடமையாற்றும் டேவிட் பாஸ்கரன் (வயது-56) வீதி விபத்தில் சிக்கி, உயிரிழந்துள்ளார்.

இவர் தனது இரவு நேரக் கடமையை முடித்துக் கொண்டு இன்று வியாழக்கிழமை (28) காலை மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், மருதமுனை மக்கள் மண்டபம் முன்பாக நேர் எதிரே வந்த இ.போ.ச. பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானபோது அதே இடத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

2001ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபையில் காவலாளியாக நிரந்தர நியமனம் பெற்ற டேவிட் பாஸ்கரன், சுமார் 24 வருட சேவையைப் பூர்த்தி செய்துள்ளார். கடமையில் பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு மிக்கவராக காணப்பட்ட இவர் கல்முனை மாநகர சபையின் சிறந்த ஊழியர் என்ற பாராட்டையும் பெற்றுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :