கண்டி நகரில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் கைது



க.கிஷாந்தன்-
ண்டி நகரில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கினிகத்தேன, அம்பகமுவ பகுதியில் நேற்று முன்தினம் காலை , நாவலப்பிட்டிய – ரம்புக்பிடிய பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் 490 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கு கினிகத்தேன பொலிஸார் கண்டிக்கு சென்றனர்.

நபர் ஒருவர் ஊடாக கஞ்சா வாங்குவது போல திட்டம் வகுத்து, சந்தேக நபரை கண்டி புதிய வீதிக்கு வரவழைத்து கைது செய்தனர். அவர் வந்த வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது அதற்குள் இருந்து 24 கஞ்சா பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

40 வயதான சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :