வைத்தியசாலைகளுக்கு அமைச்சின் செயலாளரினால் கணனி மற்றும் உபகரணங்கள் கையளிப்பு



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு நேற்று (21) விஜயம் செய்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபள்யூ.ஜீ.திசாநாயக்க அவர்கள் பிராந்தியத்தில் உள்ள சில வைத்தியசாலைகளுக்கு கணனி உள்ளிட்ட உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் எஸ்.கரன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ், பிராந்திய பிரிவு தலைவர்கள், வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளர் பிராந்திய பணிமனையின் சில பிரிவுகளுக்கும் சென்று நிலமைகளை பார்வையிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :