முல்லைத்தீவில் நிலக்கடலை வயல் விழா – சிறந்த விவசாய நடைமுறைகள் காட்சிப்படுத்தல்



முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப ஆலோசனையும், கிறிசலிஸ் நிறுவனத்தின் இணைப்பிலும், விவசாயிகள் வயல் வியாபாரப் பாடசாலை குழுக்களின் சிறந்த விவசாய நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்ட நிலக்கடலை செய்கை வயல் விழா கடந்த 25.08.2025 அன்று தண்டுவான் விவசாய விரிவாக்கல் பிரிவின் பழம்பாசி கிராமத்தில் இடம்பெற்றது.

பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் கிருபவதி சிவதீபன், உதவி விவசாய பணிப்பாளர் மேரிஆஞ்சலா லக்சன், பாடவிதான உத்தியோகத்தர், விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர்கள் (மாங்குளம், தண்டுவான்), கிறிசலிஸ் நிறுவன வட மாகாண பணிப்பாளர் ம. பிரபாகரன், திட்ட முகாமையாளர் ச. தேவதாஸ், சிரேஷ்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட இணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பழம்பாசி, கரடிப்பிலவு, 17ம் கட்டை, ஒலுமடு, அம்பகாமம் போன்ற பகுதிகளில் இருந்து விவசாயிகள் வயல் வியாபாரப் பாடசாலை குழுக்களின் சார்பில் பங்கேற்றனர்.
விவசாயிகள் காட்சிப்படுத்திய சிறந்த நடைமுறைகள்


பொருத்தமான நில பண்படுத்தல்


தரமான விதை பயன்பாடு


வரிசை விதைப்பு


பரிந்துரைக்கப்பட்ட இடைவெளி


விதை பரிகரணம்


ஜிப்சம் பயன்பாடு


தூவல் நீர் பாசன பயன்பாடு


உரம் பயன்பாடு


ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு (IPM)


தரமான விதை உற்பத்தி


இயந்திரங்களின் பயன்பாடு
சிறப்பு காட்சிகள்


விவசாய இயந்திரங்கள் காட்சிப்படுத்தல்


நிலக்கடலை விற்பனை பகுதி


பெறுமதி சேர் உற்பத்தி பகுதி


பல்வேறு பயிர் செய்கை துண்டங்கள்


பயிர் சிகிச்சை மையம்


மாவட்ட விவசாய பண்ணையின் நாற்றுகள், கன்றுகள் விற்பனை பகுதி

நிகழ்வில் விவசாயிகளே தலைமையிலான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தமது முன்னேற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுவதோடு, எதிர்கால நிலக்கடலை செய்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர்.

இந்நிகழ்வு, கலந்து கொண்ட அதிகாரிகளின் பாராட்டைப் பெற்று, விவசாயிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :