தலைப்பிறை வளர்வது போல வாழ்வும் வளரட்டும்....பெருநாள் வாழ்த்துக்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் உதுமாலெப்பை



மழான் மாதத்திலுள்ள புனிதம் என்பது மனங்களிலும் வாழ்வினிலும் பின்பற்றப்படும் போது தான் இம்மையிலும் மறுமையிலும் ஒளி கிடைக்கும். இதனை முஸ்லிம்களாகிய நாம் மிகக் கவனமாகவும் கரிசனையோடும் செய்து வருகிறோம் என்பதற்கு நானும் நீங்களும் சாட்சி.

2025 ஆம் ஆண்டின் புனித ரமழானும் ஈதுல் ஃபித்ரும் நமது வாழ்வில் மாற்றமானது.

அதாவது எப்போதும் உங்களில் ஒருவனான நான் இம்முறை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக கைகோர்த்துக் கொள்வது நீங்கள் என்னைக் கொண்டு உருவாக்கிக் கொண்ட புதிய விதியின் மகிழ்ச்சி தருணம் இது.இவ்வேளையில் நோன்பினாலும் தவத்தினாலும் உருவாக்கப்பட்ட நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியின் போராளிகளையும் அபிமானிகளையும் முஸ்லிம் மக்கள் அனைவரையும் பெருநாள் வாழ்த்துக்களால் ஆசித்துக் கொள்கிறேன்.

இன்றைய நாட்களில் நமது உறவுகள் பலஸ்தீன மண்ணில் அல்லாஹ் எழுதிய படியான வெற்றிக்குரிய நாள் வரை எதிராளிகளின் துரோகத்தனத்தால் வஞ்சிக்கப்பட்டு கொண்டு நோன்பிருந்து புத்தாடைக்கு பதிலாக இரத்த ஆடை அணிந்தபடி வலிகொண்ட பெருநாளை அனுபவித்துக் கொண்டிருப்பதையும் இவ்வேளையில் கனத்த மனதுடன் ஞாபகப்படுத்தி உணர்வுகளால் பங்கு கொள்கிறேன்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :