காரைதீவில் அமரர் மாவையின் அஞ்சலி பதாதைகள்!



வி.ரி.சகாதேவராஜா-
முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த சோமசுந்தரம் சேனாதிராஜா( மாவை சேனாதிராஜா) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக காரைதீவு எங்கும் அஞ்சலி பதாதைகள் பறக்க விடப் பட்டுள்ளன.

காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வானது இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேசக்கிளை தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஏற்பாட்டில் தலைமையில் இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வில் காரைதீவுக்கிளையின் உபதலைவர் உபசெயலாளர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் , கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :