மாற்றம் சம்மாந்துறை அமைப்பினால் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு!



சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்-
மாற்றம் சம்மாந்துறை அமைப்பின் "கல்விக்கான கரம்" வேலைத் திட்டத்தின் கீழ் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறை அல் மனார் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் ஏ. சித்தி நபீறா தலைமையில் இன்று (31) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சம்மாந்துறை அல் மனார் முஸ்லிம் வித்தியாலயத்தில் முஹம்மட் அசாப் பாத்திமா லசீறா 161, சம்சார் ஆலியா மர்யம் 159, முஹம்மது லுக்மான் மலீஜத்துன் நபாஹா 146, முபாறக் முஹம்மட் றசாத் 140 ஆகிய மாணவர்கள் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் கௌரவித்து மாற்றம் சம்மாந்துறை அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு, மாற்றம் சம்மாந்துறை அமைப்பின் ஸ்தாபக பணிப்பாளரும் தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தருமான அஸாறுடீன் சலீம், சம்மாந்துறை அல் மனார் முஸ்லிம் வித்தியாலயத்தின் வகுப்பாசிரியர் எம்.எச். நைறோஸ் என பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :