அம்பாறை மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோர்த்தார்.



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பதியத்தலாவ தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ச அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு தமது ஆதரவினை தெரிவிக்கும் நோக்கில் இன்று(03) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் 218 ஆவது கட்டமாக அம்பாறை, தெஹியத்தகண்டிய, சந்துன்புர தேசிய பாடசாலைக்கு 1,177,000 ரூபா பெறுமதியான திறன் வகுப்பறையொன்றை வழங்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு இணைந்து கொண்டார்.

1971 மே 2 ஆம் திகதி பிறந்த அவர், தனது உயர் கல்வியின் பின்னர் இலங்கை இராணுவ மருத்துவப் படையில் இணைந்து பணியாற்றினார். அம்பகவெல்ல பிரதேச வைத்தியசாலை மற்றும் அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தின் பிரதானியாகவும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :