இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரையான சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி தலைமையிலான குழுவினர் 12 நாட்களின் பின்னர் (23) வெள்ளிக்கிழமை கொக்கிளாயை அடைந்தனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இரு தினங்கள் தங்கியிருந்து சற்று ஓய்வெடுத்து பின்னர் மீண்டும் (21) செவ்வாய்க்கிழமை மீண்டும் யாத்திரையை ஆரம்பித்தார்கள்.
பாதயாத்திரைக் குழுவினர் கொக்கிளாய் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டையில் பிரவேசிக்க உள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (11) இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரை யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது தெரிந்ததே.
0 comments :
Post a Comment