குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்.



நூருல் ஹுதா உமர்-
குறைந்த வருமானம் பெறும் குடும்பபங்களுக்கு ஆதரவு வழங்கி அந்த மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் முழு நாட்டையும் உள்ளடக்கும் விதமாக குறைந்த வருமானம் பெறும் சுமார் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ கிராம் நாட்டு அரிசியை இரண்டு (02) மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ் வேலைத்திட்டம் தேசிய ரீதியாக (21) அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் தொடரச்சியாக காரைதீவில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முசாரப் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன், உதவி பிரதேச செயலாளர் செ.பாத்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் இராஐகுலேந்திரன், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம் .எம் அச்சுமுகமட் உட்பட பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரிசி வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :