தொற்றா நோய்கள் தொடர்பான செயலமர்வு கிண்ணியா தள வைத்தியசாலையில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.ரீ.எம். சௌபான் அவர்களின் தலைமையில் நேற்று (14) இடம்பெற்றது.
கிண்ணியா வைத்திய பிரதேச பிரிவுக்கு உட்பட்ட 12 கிராம நிர்வாக பிரிவுகளில் 35 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கான தொற்றா நோய்கள் தொடர்பான சிகிச்சைகள் எதிர்வரும் காலங்களில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த பிரதேச ரீதியாக மேற் கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டது.
இதன் போது கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏன்.முகம்மது கனி,
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி,கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்தியர்கள்,
கிராம உத்தியோகத்தர்கள்,
கிராம சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment