தொற்றா நோய்கள் தொடர்பான செயலமர்வு



எம்.ஏ.முகமட்-
தொற்றா நோய்கள் தொடர்பான செயலமர்வு கிண்ணியா தள வைத்தியசாலையில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.ரீ.எம். சௌபான் அவர்களின் தலைமையில் நேற்று (14) இடம்பெற்றது.

கிண்ணியா வைத்திய பிரதேச பிரிவுக்கு உட்பட்ட 12 கிராம நிர்வாக பிரிவுகளில் 35 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கான தொற்றா நோய்கள் தொடர்பான சிகிச்சைகள் எதிர்வரும் காலங்களில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த பிரதேச ரீதியாக மேற் கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டது.

இதன் போது கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏன்.முகம்மது கனி,
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி,கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்தியர்கள்,
கிராம உத்தியோகத்தர்கள்,
கிராம சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :