கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் சகீலா இஸ்ஸடீன், பிராந்திய திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் ஆகியோர் (06) அன்னமலை பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர்.
இதன்போது PSSP திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் அமையப்பெறவுள்ள மருந்தகம் தொடர்பாகவும் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் கலந்துரையாடிய பணிப்பாளர் புதிய கட்டிடத்தில் மருந்தகத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, களஞ்சியசாலை, விடுதி மற்றும் மருந்தகத்தினையும் பார்வையிட்டனர்.
0 comments :
Post a Comment