நிந்தவூர் ஆதார வைத்திய சாலையில் ஆண்கள் விடுதியின் புனர்நிர்மாணம்.



நூருல் ஹுதா உமர்-
நிந்தவூர் ஆதார வைத்திய சாலையில் நீண்ட நாட்களாக பல்வேறு இட நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறைந்த வசதிகளுடனும் இயங்கி வந்த ஆண்கள் விடுதி தற்பொழுது புனர்நிர்மாணம் செய்யப்பட்ட புதிய இடத்தில் இயங்கி வருகின்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி எஸ். ஆர். இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம். பி.அப்துல் வாஜித் அவர்களின் நேரடி மேற்பார்வையிலும் விடுதியின் பொறுப்புத் தாதிய உத்தியோகத்தர் திருமதி எம். வை. பாயிகா அவர்களின் நேரடி வழிகாட்டலிலும் இந்நிகழ்வு இடம் பெற்றது.

இப்புனர்நிரமாண வேலையானது வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் எம்.என்.எம். யூசுப், வைத்தியசாலையின் PDO திரு கே. எம்.றபீக், அல் அஸ்ரக்கியன் 98 அமைப்பின் உறுப்பினர்கள், ரெயின்போ பிரிண்டர்ஸ் உரிமையாளர், மற்றும் எம். வை. பாரிஸ், நலன்விரும்பிகள், வைத்தியர்கள், தாதியர்கள் என பல்வேறு தரப்பினரின் பொருளாதார மற்றும் சரீர உதவியுடனும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர், ஊழியர்களின் முழுமையான பங்களிப்புடனும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :