மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச மகளிர் தின விழாவும் விற்பனைக் கண்காட்சியும் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் பழுகாமம் துரௌபதி அம்மன் ஆலய வளாகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக வன்னி ஹோப் பணிப்பாளர் ரஞ்சன் சிவஞானசுந்தரம் கலந்து கொண்டார்.
"அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு அதிதிகளினால் கெளரவம் வழங்கப்பட்டதுடன் மகளிர் தின சிறப்பு பேச்சு, வினோத உடைப்போட்டி, நடனம், என பல நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இவ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது
இந் நிகழ்வில் போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் துலாஞ்சனன், போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் எஸ்.பகிதரன் ,உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.சசிகரன், வன்னி ஹோப் வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.பாஸ்கரன் பிரதேச செயலக உயர் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment