மல்வத்தை பிரதேச வைத்தியசாலைக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஜயம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்மாந்துறை, மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவின் சேவைகள் தற்போது மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

அதிகமான நோயாளர்கள் குறித்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக தினமும் வருவதுன்டு, வெளிநோயாளர் பிரிவில் போதுமான இடவசதிகள் இல்லாததன் காரணத்தினால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் பலரும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனையடுத்து ஆரம்ப சுகாதார சேவையினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் (PSSP) சுமார் 2மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டது.

அந்த வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தினை மக்கள் பாவனைக்கு கையளித்து வைத்தியசாலையின் சுகாதார நடவடிக்கைகளையும் பார்வையிடும் பொருட்டு அண்மையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் மல்வத்தை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், மல்வத்தை வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி உள்ளிட்ட வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :