அரச பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு : பேராசிரியர் பாஸில் கலந்து கொண்டார்.



நூருல் ஹுதா உமர்-
ருதமுனை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் புதிய நிர்வாகத்தின் முதல் செயற்திட்டமாக 2022/2023 கல்வியாண்டில் அரச பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் மருதூர் கொத்தன் கலையரங்கில் வெகு விமர்சையாக அமைப்பின் தலைவர் ஏ.பைஹான் அஹமட் தலைமை இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு அதிதிகளாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், சட்டத்தரணி எம்.ஐ. இயாஸ்தீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான கலீல் முஸ்தபா, டாக்டர் சஸ்லி ஹமீட், பரக்கத் டெக்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஐ.ஏ. பரீட் மற்றும் மருதமுனை இளங்கலைப் பட்டதாரிகள் அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினர்கள், இளங்கலைப் பட்டதாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் அதிதிகளினால் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :