காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு பெளத்த மத குருவின் நல்லிணக்க விஜயம்



எம்.எம்.றம்ஸீன்-
ன நல்லுறவு, மத நல்லிணக்கம் போன்ற செயற்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டவரும் நாடறிந்த சமூக செயற்பாட்டாளருமான பொஹவந்தலாவ ராகுல ஹிமி தேரர் அவர்கள் கடந்த புதன்கிழமை விஷேட விஜயம் மேற்கொண்டு காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு வருகை தந்திருந்தார்.

இவரது வருகையை ஒட்டி விஷேட காலை ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ. நிஹால் அஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்காலை கூட்டத்தில் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள், தமிழ், முஸ்லிம் மக்களோடு தான் கொண்டுள்ள உறவு, இன,மத நல்லிணக்க பயணத்தில் மாணவர்களின் பங்கு போன்ற விடயங்களை முன்வைத்து அழகிய முறையில் தமிழில் விஷேட உரை நிகழ்த்தியமை குறிப்பிட்டத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :