ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பால் வீடற்ற குடும்பத்திற்கு வீடு



அஸ்ஹர் இப்றாஹிம்-
நாட்டில் பொருட்களின் விலை உயர்வின் நிமித்தம் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது இப் புதிய ஆண்டிலும் தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.

விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 133 ஆவது இல்லமும் PLEDGE TO RESTORE FOUNDATION இனது முதலாவது இல்லத்திற்குமான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இவ் இல்லமானது திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தென்னைமரவாடி பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்படவுள்ளது.

இம் மகத்தான சேவைக்கான நிதி உதவியை அவுஸ்திரேலிய மற்றும் இலங்கையில் செயற்படுகின்ற PLEDGE TO RESTORE FOUNDATION இனது ஸ்தாபகர் வழங்கியிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :