ஒலுவில் அல் ஹம்றா மாணவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம்!

ல்கலைக்கழக அறிவுசார் வளங்களை சூழவுள்ள மாணவர்களும் தங்களது அறிவுவிருத்திக்கு பயன்படுத்த அனுமதிக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயரிய சிந்தனையின் கீழ்; உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களின் அனுமதியுடன் பல்கலைக்கழகத்துக்கு மிகவும் அண்மையில் இருக்கும் அல் ஹம்றா பாடாசலையில் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்கள் இன்று 2024.02.15 ஆம் திகதி கலை கலாச்சார பீடம், தொழில்நுட்பவியல் பீடம் மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகம் உள்ளிட்ட பல்வறு இடங்களை பார்வையிட்டதுடன் கலை கலாச்சார பீடத்தில் இடம்பெற்ற அறிவுசார் செயலமர்விலும் கலந்துகொண்டனர்.

கலை கலாச்சார பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அறிவுசார் செயலமர்வில் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் அவர்கள் பிரதான பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வின்போது தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி யூ.எல். அப்துல் மஜீட், கலை கலாச்சார பீட சமூகவியல் துறையின் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.எம்.ஐயூப் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.றிஸ்வான் ஆகியோரும் மாணவர்களின் உளவள விருத்தியோடு சம்மந்தப்பட்ட உரைகளை ஆற்றினர்.

அல் ஹம்றா பாடசாலையின் அதிபர் அஷ்செய்க் யூ.கே. அப்துர் றகீம், வலய தலைவர் ஏ.சி. இஸ்மாயில், பிரதி அதிபர் அஹமட் ஜுமான், பிரதி அதிபர்

ஜெ. வஹாப்டீன், பிரதி அதிபர் எம்.ஏ. கமறுன் நிஷா, வலய பிரதி தலைவர் எம்.ஏ. அஹமட் பாரிஸ், ஆசிரியர்களான எம்.ஏ.சி.எம். இஹ்சாஸ், எம்.ஐ. முஸ்பிறா, எம்.எஸ்.எம். சத்தார் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அகமட் அஷ்ஹர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக வேலைப்பிரிவு மேற்பார்வையாளர் எஸ்.எம்.வி.எம். அலி அக்ரம் அவர்களும் இவர்களுடன் இணைந்திருந்தார்.



ஊடக பிரிவு
தென்கிழக்கு பல்கலைக்கழகம்

 





















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :