தென்கிழக்கு பல்கலையில் 16 வது பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்!! (படங்கள் இணைப்பு)



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 வது பட்டமளிப்பு விழா நேற்று (2024.02.10) ஆரம்பமானது குறித்த பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று (2024.02.10) இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வுகள் பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர் அவர்களது வழிகாட்டலில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது தலைமையில் அரங்கேறியது.

இரண்டாம் நாளின் நான்காவது அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தை சேர்ந்த 314 பட்டதாரிகளும் ஐந்தாவது அமர்வில் கலை கலாசார பீடத்தை சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 350 பேரும் ஆறாவது அமர்வில் முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 361 பேரும் பட்டங்கள் பெற்றுக்கொண்டனர்.

இதனடிப்படையில் நேற்றும் இன்றுமாக 1441 உள்வாரி பட்டதாரிகளுக்கும் 711 வெளிவாரி பட்டதாரிகளுக்குமாக மொத்தம் 2152 பட்டதாரிகள் இந்த பட்டமளிப்பு விழாவின் போது பட்டங்களை பெற்று வெளியேறினர்.


நான்காவது அமர்வில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில்

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் முதுநிலை வணிக நிர்வாகத்தில் 09 பட்டதாரிகளும் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் முகாமைத்துவ முதுகலை டிப்ளோமாவில் 09 பட்டதாரிகளும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் வர்த்தக துறையில் சிறந்த மாணவருக்கான அல் ஹாஜ் ஏ.எம். இஸ்மாயில் ஞாபகார்த்த விருது ஜுனைடீன் பாத்திமா ஷனாவுக்கு கிட்டியது.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் முகாமைத்துவ துறையில் சிறந்த மாணவருக்கான விருது முஹம்மட் அலியார் பாத்திமா ஜில்ஷா பெற்றுக்கொண்டார்.

நிகழ்வுகளின் போது பேரவை அங்கத்தினர்கள், பட்டமளிப்விழாக் குழு தலைவர் பேராசிரியர் எம்.பி.எம் இஸ்மாயில், பீடாதிபதிகள், நூலகர், பதில் நிதியாளர்,  பேராசிரியர்கள் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் ஊடக பிரிவினர், கல்விசாரா ஊழியர்கள் பட்டங்களை பெற்ற பட்டதாரிகள் அவர்களின் பெற்றோர் உறவினர்கள் என பல்கலைக்கழக வளாகம் நிறைந்து காணப்பட்டது.






















































































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :