மரக்கறி விலை உச்சம் தொட்டதனையடுத்து பலாக்காய், ஈரப்பலா, வட்டக்காய்(சுரக்காய்) போன்றவற்றை அதிகளவில் நாடத் தொடங்கியுள்ள மக்கள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மாற்றத்தால் சாதாரண மரக்கறிகளின் விலை மிகவும் உச்சம் தொட்டதால் சாதாரண மக்களால் இதனை தாக்குப்பிடிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாரம்பரிய காய் கறி கொள்வனவை பலர் கைவிட்டு பலாக்காய், ஈரப்பலாக்காய் , வட்டக்காய்(சுரக்காய்) ,மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றையே மக்கள் அதிகளவில் கொள்வனவு செய்கின்றனர்.

இன்னும் சிலர் வள்ளல்,வல்லாரை, பொன்னாங்காணி, நாட்டுக்கீரை, பசளி, குப்பை மேனி போன்ற சாதாரண கீரை வகைகளை அதிகளவில் கொள்வனவு செய்கின்றனர்.
இதனால் ஆங்கில மரக்கறிகளை கொள்வனவு செய்வதில் மக்கள் அக்கறை செலுத்தாததினால் சந்தைகளில் வியாபாரிகள் பெரும் நஸ்டத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :