பொத்துவிலில் இருந்து ஆத்திமுனைக்கு செல்லும் வீதி பயணிப்பதற்கு பொருத்தமற்றதாக மாறியுள்ளது.



அஸ்ஹர் இப்றாஹிம்-
வெளிப்பிரதேசங்களில் இருந்தோ அல்லது பொத்துவிலில் இருந்தோ ஆத்திமுனைக்கு வாகனங்களில் வருபவர்கள் மற்றும் ஆத்திமுனை, சர்வோதயபுரம்,ஹிஜ்ரத் நகர் போன்ற கிராமங்களிலிருந்து செல்பவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக இடைவிடாத மழை பெய்து வருவதன் காரணமாக இடம்பெற்ற வெள்ளப்பெருக்கினால் பொத்துவில் ஆத்திமுனைக்கு செல்லும் வீதியின் நிலை மிகவும் மோசமடைந்து பயணிப்பதற்கு பொருத்தமற்றதாக மாறியுள்ளது.

குறித்த வீதியானது 12 கிலோ மீட்டர் தூரம் வரை கொங்ரீட் வீதியாக புனர்நிர்மாணத்திற்கு விட்டபோதும் அதன் அபிவிருத்திப் பணிகள் சுமார் இரண்டு ஆண்டுகளாக இடைநடுவே கைவிடப்பட்டு காணப்படுகிறது.

வீதியின் குறிப்பிட்ட பகுதியே இவ்வாறு சேதம் அடைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :