சாய்ந்தமருது பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!



சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று(30) பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் ,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எம்.அஸ்மி, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் கே.எல்.ஏ ஹமீட், கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஹிபதுல் கரீம், கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் ஸஹதுல் நஜீம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பின் இணைப்பாளர் ஏ.ஏ அஸாம் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள்,பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இதன் போது சாய்ந்தமருது பிரதேசத்தில் சுகாதாரம், கல்வி,காணி விளையாட்டு நீர்ப்பாசனம்,
தோணா அபிவிருத்தி, கடலரிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகவும் மீனவர்கள் எதிர் நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக்கலந்துரையாடப்பட்டதுடன் முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதே வேளை இவ்வாண்டுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பினால் முன் மொழியப்பட்டுள்ள பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட முன்மொழிவுகளுக்கு இங்கு அனுமதியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :