சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்



சர்ஜுன் லாபீர்-
ம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று(30) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபாவின் ஏற்பாட்டில் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும்,முன்னாள் அமைச்சரும்,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லா தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், கணக்காளர் ஐ.எல் பாரீஸ் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்,திணைக்களங்களின் பிரதிநிதிகள்,மஜ்லிஸ் சூறா பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பிரதேச காணிப் பிரச்சினைகள்,மையவாடி மற்றும் பாடசாலைகளுக்கு காணி விடுவிப்பு விடயங்கள்,நீர்பாசனம் சார்ந்த முன்மொழிவுகளும் அதற்கான தீர்வுகளும் ,விவசாயம் சார்ந்த முன்மொழிவுகளும் அதற்காம தீர்வுகளும்,நகரமயமான கிராமங்களின் அபிவிருத்தி விடயங்கள் போன்றவர்கள் பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :