ஆளுநர் தலைமையில் கிழக்கு மாகாண தேசிய சுதந்திர தின விழா மட்டக்களப்பில்!



வி.ரி.சகாதேவராஜா-
லங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் நான்காம் தேதி மூன்று மணிக்கு நடைபெற இருக்கின்ற இந்த சுதந்திர தின விழா தொடர்பான முன்னோடி கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பில் உள்ள ஆளுநர் சுற்றுலா விடுதியில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தின் பின்னர் மட்டக்களப்பு வெபர் அரங்கு கல்லடி பாலம் உள்ளிட்ட இடங்களையும் ஆளுநர் தலைமையிலான குழு பார்வையிட்டது.

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

சகல மாகாண செயலாளர்களும் கல்வி புலத்தினரும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :