திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் நள்ளிரவில் நடேசராபிசேகம்: காலையில் திருவாதிரை தீர்த்தம்.



காரைதீவு சகா-
திருக்கோவில் விநாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார்
குருகுலத்தில் வருடாந்த திருவெம்பாவை உற்சவத்தின் திருவாதிரை தீர்த்தம் நேற்று (27) புதன்கிழமை காலை 6.15 மணியளவில் பக்திப்பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

குருகுலப்பணிப்பாளர் கண இராஜரத்தினம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நள்ளிரவில் ஆருத்ரா அபிஷேகம் இடம்பெற்றது.

அதிகாலையில் ஆருத்ரா தரிசனமும் அதனை அதனைத் தொடர்ந்து குருகுலத்தின் தீர்த்தக் கிணற்றில் தீர்த்த உற்சவம் இனிதே நிறைவேறியது.

கௌரி அம்மன் ஆலய பிரதம குரு. நிலோஜன் ஐயா கிரியைகளை நடத்தினார் .
அதனைத் தொடர்ந்து திருவம்பாவை பூசையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இல்ல செயலாளர் பா.சந்திரேஸ்வரன்( அதிபர்) உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :