கால் நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் காத்தான்குடியில் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு



எம்.எம்.றம்ஸீன்-
கால் நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் காத்தான்குடி அலுவலகத்தினால் சனிக்கிழமை கோழிக்குஞ்சுகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் ஆலோசனையின் பேரிலும் வழிகாட்டலிலும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவயுடன் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் இந்த கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள 25 பயனாளிகளுக்கு 15 வீதம் ஒரு மாதம் நிரம்பிய கோழிக் குஞ்சுகள் இதன் போது வழங்கப்பட்டன

கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளரும் காத்தான்குடி அலுவலகத்தின் பொறுப்பதிகாரியுமான டாக்டர் டி. மாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கோழிக்குஞ்சுகள் வழங்கும் வைபவத்தில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு. எல் நசிர்தீன் உட்பட அதிகாரிகள் பயனாளிகள் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :