சம்மாந்துறையில் டேலண்ட் ப்ளஸ் ஊடக விருது : எமது பிராந்திய நிருபர்களுக்கும் கௌரவம்



மாளிகைக்காடு நிருபர்-
ம்மாந்துறை டேலண்ட் ப்ளஸ் கலை, இலக்கிய, ஊடக வலையமைப்பினால் சாதனையாளர்கள், திறமையானவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வலையமைப்பின் ஸ்தாபகர் அல்ஹாபிழ் ரிஷான் முஹம்மட் சில்ஹான் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சம்மாந்துறை டேலண்ட் ப்ளஸ் கலை, இலக்கிய, ஊடக வலையமைப்பினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள், ஏனைய கல்விசார் சாதனையாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை, இலக்கிய ஆளுமைகள் எனப்பலரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழு செயலாளர் ஏ. மன்சூர், கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர் (நிர்வாகம்) எம்.எம். நஸீர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேலும் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். எம்.ஹனீபா, இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஸ்ஸான், சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ், சம்மாந்துறை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம். எச்.எம்.ஆஸாத், இலங்கை உயர்தொழிநுட்பவியல் நிர்வக பணிப்பாளர் எஸ்.எல். முஸ்தபா, இலங்கை உயர்தொழிநுட்பவியல் நிர்வக பிரதம கணக்காளர் எஸ்.ஏ. ஜிப்ரி உட்பட முக்கிய அரச உயரதிகாரிகள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், சம்மாந்துறை முச்சபை நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பிராந்தியத்தின் முன்னணி ஊடகவியலாளர்களான நூருல் ஹுதா உமர், பாரூக் ஷிஹான், றியாத் ஏ மஜீத், ஐ.எல்.எம். நாஸிம், எம். பி.எம்.ரிம்ஸான், ஏ.கே. ஜௌபர் ஆகியோருக்கு ஊடகத்துறைக்கான கௌரவமும் தாருஸபா ஊடகவலையமைப்புக்கு ஊடக நிறுவன விருதும், பிரதேச அறிவிப்பாளர்களுக்கு அறிவிப்பாளர் கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :