ஒலுவில் பிரதேச இளைஞர்கள் நாபீர் பௌண்டேஷனில் இணைவு !



நாபீர் பௌண்டேஷனில் - ஒலுவில் பிரதேச பல இளைஞர்கள் இன்று இணைந்து கொண்டனர். பிரதேச ரீதியாக - பௌண்டேஷனின் ஆதரவாளர்களை ஒன்றினைக்கும் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக - ஒலுவில் பிரதேச இளைஞர்கள் பல நூறு பேர் - இவ்வாறு இணைந்து கொண்டனர்.
நாபீர் பௌண்டேஷனின் தலைவர் - பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் அவர்கள் - தனது சொந்த நிதியில் சமுகத்துக்காக முன்னெடுக்கும் நல்ல பல பணிகளில் ஈரக்கப்பட்டே பௌண்டேஷனில் இவ்வாறு இளைஞர்கள் இணைந்து வருகின்றனர்.
 
நாபீர் பௌண்டேஷனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பாரிஸ் கரீம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் - பௌண்டேஷனின் உயர்பீட மற்றும் பிரதேச அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர். போதே இவ்வாறு இணைந்து செயற்பட முன்வந்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் - நாபீர் பௌண்டேஷன் தனித்து களமிறங்க தயாராகிவரும் நிலையில் - அம்பாரை மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச ரீதியாக தமது ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
ஒலுவில் செயற்பாடாளர்கள் பலர் முதல் கட்டமாக அண்மையில் நாபீர் பௌண்டேஷனில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :