கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் ஸ்பிறிட்டை கொண்டு சென்ற இளைஞர்கள் இருவர் அரநாயகாவில் கைது



அஸ்ஹர் இப்றாஹிம்-
சிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் ஸ்பிரிட்டை பொலிதீன் பைகளில் பொதி செய்து பிளாஸ்டிக் கூடைக்குள் வைத்து தேயிலைக் கொழுந்தை கொண்டு செல்லும் தோறணையில் வாகனத்தில் எடுத்துச் சென்ற சந்தேக நபர்கள் இருவரை அரநாயக- அம்பலகந்த வீதியில் கோண்கஹமுல்ல பிரதேசத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை(17) அரநாயக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் உடகம பிரதேசத்தைச் சேர்ந்த 30,32 வயதையுடைய இளைஞர்களாகும்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் உடகம பிரதேசத்திலுள்ள சந்தேக நபரொருவரின் வீட்டுக்கு பின்னாலுள்ள காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையமொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரோகண ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் அரநாயக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராகுல பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதுடன், கசிப்பு உற்பத்தி பொருட்களையும் கைப்பற்றியும் உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :