கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி தரம் 11 பிரிவு மாணவர்களுக்கான வகுப்பறை மட்ட கவிநிலை போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும்.


அஸ்ஹர் இப்றாஹிம்-

பாடசாலை வகுப்பறைகளை மாணவர்களுக்கு உகந்த கற்றல்- கற்பித்தல் சூழலை உயிரோட்டம் உள்ளதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றி அமைப்பதற்கு பாடசாலையில் முன்னெடுக்கப்படுகின்ற பகுதி வாரியான வகுப்பறை மட்ட போட்டி நிகழ்ச்சிகளின் ஒரு கட்டமாக தரம் 11 மாணவர்களின் வகுப்பறை மட்ட போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்வானது கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.ஜாபீர் அவர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப தரம் 11 இன் பகுதி தலைவர்களான ரீ.கே.எம். சாக்கீர் மற்றும் ஏ.எம். அப்றாஜ் றிழா ஆகியோரது வழிகாட்டுதலுடன் தமது பிரிவின் அனைத்து வகுப்பறைகளிலும் உள்ளக மற்றும் வெளிச்சூழல்களை வகுப்பு ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடனும், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரதும் பூரண ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்வில் கல்முனை முஸ்லிம் பிரிவின் கோட்டக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.றியாஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு,கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்றுக்குழு செயலாளர் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் ஆகியோர் வகுப்பறைப் போட்டிகளின் புள்ளி கணிப்பீடுகளுக்கான நடுவர்களாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :