சம்மாந்துறையில் கல்முனைக் கல்வி மாவட்ட தமிழ் மொழி தின போட்டி! பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் அகிலா.



வி.ரி.சகாதேவராஜா-
கில இலங்கை தமிழ் மொழித்தினத்திற்கான கல்முனைக் கல்வி மாவட்ட தமிழ் மொழி தினப் போட்டி நேற்று(31) வியாழக்கிழமை சம்மாந்துறை அல்-மர் ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, மற்றும் திருக்கோவில் ஆகிய நான்கு கல்வி வலயங்களின் போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இந்த மாவட்ட மட்ட போட்டி நிகழ்வின் துவக்க விழா, சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் நடைபெற்றது .

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதம அதிதி தேசியக் கொடி ஏற்றியதும், சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

ஏனைய கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

விழாவில், இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெற இருக்கும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியத்தை, வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா பாராட்டி வாழ்த்து மடலும், நினைவுச்சின்னமும் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :