"ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வோம், மகிழ்ச்சிகரமாக வாழ்வோம்" எனும் தொனிப்பொருளில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி தரம் 7 மாணவர்கள் "ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வோம், மகிழ்ச்சிகரமாக வாழ்வோம்" எனும் தொனிப்பொருளில் நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.

கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களின் வழிகாட்டலில் தரம் 7 பகுதித் தலைவர் ஏ.எல்.எம்.ஹக்கீம் தலைமையில் வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் பிரதம அதிதியாகவும், வைத்தியர்களான டாக்டர் .ஸனூஸ் காரியப்பர், டாக்டர் ஏ.எல்.பாறூக், டாக்டர்.எம்.என்.எம்.தில்ஸான் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் , பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் சிறப்புரைகளை வைத்தியர்கள் மிகவும் பயனுள்ள வகையில் மாணவர்களுக்கு முன்வைத்தார்கள்.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதின் முக்கியத்துவத்தையும் உடன் உணவுகளை (Fast Food) உட்கொள்வதின் பிரதிகூலங்களும் மாணவர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தரம் 7 மாணவர்களுக்கும் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இலைக்கஞ்சி வழங்கப்பட்டதுடன் ஆரோக்கியமான உணவுகளும் பரிமாறப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :