"ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வோம், மகிழ்ச்சிகரமாக வாழ்வோம்" எனும் தொனிப்பொருளில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி தரம் 7 மாணவர்கள் "ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வோம், மகிழ்ச்சிகரமாக வாழ்வோம்" எனும் தொனிப்பொருளில் நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.

கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களின் வழிகாட்டலில் தரம் 7 பகுதித் தலைவர் ஏ.எல்.எம்.ஹக்கீம் தலைமையில் வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் பிரதம அதிதியாகவும், வைத்தியர்களான டாக்டர் .ஸனூஸ் காரியப்பர், டாக்டர் ஏ.எல்.பாறூக், டாக்டர்.எம்.என்.எம்.தில்ஸான் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் , பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் சிறப்புரைகளை வைத்தியர்கள் மிகவும் பயனுள்ள வகையில் மாணவர்களுக்கு முன்வைத்தார்கள்.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதின் முக்கியத்துவத்தையும் உடன் உணவுகளை (Fast Food) உட்கொள்வதின் பிரதிகூலங்களும் மாணவர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தரம் 7 மாணவர்களுக்கும் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இலைக்கஞ்சி வழங்கப்பட்டதுடன் ஆரோக்கியமான உணவுகளும் பரிமாறப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :