கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி க.பொ.த.உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் தென்கிழக்குபலகலைக்கழகத்திற்கு ஆசிரியர்களுடன் கடந்த திங்கள் ( 24)விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

தென்கிழக்கு பல்கலைக் கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்திற்கு சென்ற மாணவர் குழுவினர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து உசார்த்துணை மற்றும் வழிகாட்டல் ஆலோசனைகளை பெற்று எதிர்வரும் உயர்தரப் பரீட்சைகளில் திறமையாக சித்தியடைவதற்கான யுக்திகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த விஜயம் அமைந்திருந்தது.

பல்கலைக்கழக உப வேந்தரும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவருமான பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி வழிகாட்டல் ஆலோசனையின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பீடத்தலைவர், நூலகர், சிரேஷ்ட உதவி நூலகர்கள் இம் மாணவர்களுக்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :