புகழ்பெற்ற கல்முனை பாலிகாவுக்கு புதிய பழைய மாணவிகள் சங்கம் தெரிவானது : செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா தெரிவானார்.



நூருல் ஹுதா உமர்-
லங்கையின் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி (தேசிய பாடசாலை) பழைய மாணவிகள் சங்கத்திற்கான வருடாந்த பொதுக்கூட்டம் பாடசாலையின் சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் கல்லூரி அதிபர் யூ.எல். அமீன் தலைமையில் கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியும், கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ் உட்பட பழைய மாணவிகளின் பங்குபற்றலுடன் அண்மையில் நடைபெற்றது.

இந்த பழைய மாணவிகள் சங்கத்திற்கான வருடாந்த பொதுக்கூட்டத்தில் பாடசாலை கல்வி, பௌதீக அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது டன் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. அதில் பதவி வழியாக பாடசாலை முதல்வர் யூ. எல்.அமீன் தலைவராகவும், செயலாளராக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், கல்முனை சட்டத்தரணிகள் சங்க உப தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பரும், பொருளாளராக விரிவுரையாளர் ஏ.பி.எஸ். றிகானா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் உப தலைவராக ஷாமிலா ஜஹ்பர், உப செயலாளராக எம்.எம். உம்மு ஹபீபா, உப பொருளாளராக ஏ.சி. பஸ்லுனா, கணக்காய்வாளராக எம்.எம். சியாதா ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக ஏ.எச்.சித்தி சபீனா, எம்.ஐ. சபானா, ஏ.எச். ஜெஷ்மின் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த புதிய நிர்வாகம் எதிர்கால பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :