கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு



ஹஸ்பர்-
திருகோணமலை மூதூர் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சின்னக் குளம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று (01 ) பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றதுடன் இதனை திருகோணமலை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் பரமேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைவாக உலக சுகாதார ஸ்தாபனத்தில் கடமையாற்றும் குணாளன் என்பவரின் முயற்சியின் பயனாக மறைந்த சுரேஸ் குமாரின் நினைவாக கந்தையா தொண்டு நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சுமார் 75 மாணவ மாணவிகளுக்காக இது வழங்கப்பட்டன.
மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் வறுமை நிலை கல்விக்கு தடை இல்லை என்பதனை வைத்து கற்றல் உபகரணங்களின் பிரதிபலனாக எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக சமூக சேவை திணைக்கள இணைப்பாளர் த.பிரணவன், மூதூர் பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சில்மியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :