திரியாயில் கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு இராணுவம் உணவு மருத்துவ உதவி!



வி.ரி. சகாதேவராஜா-
ந்துக்களின் பாரம்பரிய யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி புறப்பட்ட ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் நேற்று (17) புதன்கிழமை காலை திருகோணமலை திரியாயை வந்தடைந்தனர்.

புல்மோட்டையிலிருந்து திரியாய் வந்தடைந்த யாத்திரீகர்களை அங்குள்ள இராணுவத்தினர் மற்றும் பௌத்த விகாரை பிக்கு வரவேற்றனர்.

அவர்களுக்கு காலை ஆகாரம் வழங்கி மருத்துவ முகாம் வசதியையும் ஏற்பாடு செய்து வழங்கி வைத்தனர்.

இன்று (18) வியாழக்கிழமை கும்புறுப்பிட்டியில் யாத்திரீகர்கள் தங்குவார்கள்.

குழுவில் இதுவரை 68 யாத்திரீகர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :