சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் முன்பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்



நூருள் ஹுதா உமர்-
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் முன்பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது 13 ஆம் பிரிவில் ஏ.ஆர்.எம். முன்பள்ளி பாடசாலை 145 மாணவர்களுக்கு தொடர்ச்சியாக 02 மாதங்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலில் சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவ ஃபிக்கா, கணக்காளர் ஏ.ஜே. நுஸ்ரத் பானு, சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.றிபாயா, கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ மஜீத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.காலிதீன், குடும்ப நல உத்தியோகத்தர்களான வி.நலாஜினி, ஏ.ஆர். சாஜிதா பர்வின், மாணவர்களின் பெற்றோர்களும், சமுர்த்தி சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள்
உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :