இந்தியா சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி குடும்பத்துடன் இலங்கை வருகை தந்திருந்தார். அவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்கார் தலைமையில் முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பிணர்கள் சிலரும் நட்புறவு ரீதியில் 20.05.2023, கொள்ளுப்பிட்டி மெரைன் பீச் ஹோட்டலில் வைத்து சந்தித்தனர்
இச் சந்திப்பில் சிரேஸ்ட ஊடகவிலாளர் எம்.ஏ.எம் நிலாம், ஊடகவியலாளர்களான சாதிக் சிகான், ஜெம்சித் . ஆகியோர்களும் கலந்துகொண்டனர். அத்துடன் இந்திய மற்றும் அவரது நீதித்துறை தீர்ப்புக்கள், அவரது இலக்கிய, எழுத்துத்துறை ஆண்மிகத்துறை பற்றிய அனுபவங்களையும் முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார்.அத்துடன் நீதிபதியின் புதல்வர் அக்கீல் அஹமட் சென்னை உயர் நீதிமன்ற சட்டத்தரணியும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment