வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் புத்தாக்க ஆய்வுகூடம் திறந்து வைப்பு



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் புத்தாக்க ஆய்வுகூடமொன்று நேற்று (3) புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற ஆய்வுகூட திறப்பு விழா நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர், பிரதிக் கல்விப் பணிப்பாளரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர், வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் என்.சஹாப்தீன், வை.அஹமட் வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ், பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய அதிபர் எல்.ரீ.எம்.சாதிக்கீன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.எஸ்.எம்.அன்வர், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு ஆய்வு கூடத்தை திறந்து வைத்தனர்.

பாடசாலை ரீதியாக இளம் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கும் நோக்கில் இந்த ஆய்வுகூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவ் ஆய்வுகூடத்தை மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :